கோவையில் சிக்கன் கடை ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது...

published 2 weeks ago

கோவையில் சிக்கன் கடை ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: கோவை சவுரிபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜய்(23). சிக்கன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து சவுரிபாளையம் பகுதியில் நடந்து சென்றார். 

அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கமலேஷ் ஆகியோர் விஜயிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பின் விஜய் வைத்திருந்த ரூ.4,500 மற்றும் மொபைல் போனை பறித்து தப்பி சென்றனர். 


புகாரின் பேரில், பீளமேடு போலீசார் சவுரிபாளையத்தை சேர்ந்த பாலாஜி(27) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கமலேசை தேடி வருகின்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw