கோவையில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

published 9 months ago

கோவையில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

கோவை: கோவை கரும்புக்கடை  சாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில்  மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையிலும் நாளுக்கு நாள் வேலையின் தாக்கம் அதிகமாக இருந்து வெப்ப அலை வீசுவதாலும் போதிய மழை நீர் இல்லாதாலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் பொதுமக்கள் குடிக்கு தண்ணீர் இன்றியும் அணைகளில் நீர்வரத்து வரலாறு காணாத அளவில் குறைந்து வருவதால் சிறப்புத் தொழுகையில் ஈடுப்பட்டனர்.

விவசாயிகளும் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.மழை பெய்ய வேண்டி கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் காலை 7 மணி அளவில் மௌலவி யூனுஸ்  ஃபிர்தெளசி சிறப்பு தொழுகை நடத்தினார்

இதில்  இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe