கோவை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஸ்டாங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது...

published 10 months ago

கோவை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஸ்டாங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது...


வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் பணிகள் நிறைவடைந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

     கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணியானது நடைபெற்றது.

இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார்  சீல் வைத்தார்.

மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருட்டபட்டு கட்டுப்பாட்டு அறையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe