கோவையில் கல்யாண மண்டபத்தில் நகை செல்போன் திருட்டு...

published 9 months ago

கோவையில் கல்யாண மண்டபத்தில் நகை செல்போன் திருட்டு...

கோவை: கோவை பூ மார்க்கெட் தேவாங்கபேட்டை தெருவை சேர்ந்தவர் கிருத்திகா (31). இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்போது அவர் தனது பேக்கை மேடையின் ஓரமாக வைத்து விட்டு மணமக்களுடன் நின்று புகைப்படம் எடுத்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அவரது பேக்கை காணவில்லை. அதில் 3.5 பவுன் நகை, 2 செல்போன் மற்றும் கார் சாவி இருந்தது. மர்ம நபர் திருடி சென்று விட்டார். 

இதுகுறித்து கிருத்திகா கவுண்டம்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை, செல்போன்களை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe