கோவையில் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு…

published 9 months ago

கோவையில் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு…

கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி பங்கஜம்(73). இவர் நேற்று மணீஸ் தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார். பின்னர் ஆர்கே மில் நிறுத்தத்தில் இறங்கிய போது மூதாட்டி தனது கழுத்தில் கிடந்த செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே அவர் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe