எல் அண்ட் டி பைபாசில் மாணவரை வழிமறித்து செல்போன் பறித்த கும்பல்!

published 9 months ago

எல் அண்ட் டி பைபாசில் மாணவரை வழிமறித்து செல்போன் பறித்த கும்பல்!

கோவை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவ சத்யா (18). கல்லூரி மாணவரான இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக தனது நண்பர் ஒருவருடன் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள ரயில்வே பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல் ஜீவ சத்தியாவை வழிமறித்தனர். பின்னர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் செல்போன் பறித்து சென்ற மூன்று பேர் கும்பலை தேடி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe