கோவையில் கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு...

published 9 months ago

கோவையில் கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு...

கோவை: கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர், நேற்று தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 பேர் அவரிடம் பணம், செல்போன் தருமாறு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். 

இதுகுறித்து நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்துச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe