கோவையில் பொருட்களை உருட்டும் சத்தத்தால் சிக்கிய கொள்ளையன்...!

published 9 months ago

கோவையில் பொருட்களை உருட்டும் சத்தத்தால் சிக்கிய கொள்ளையன்...!

கோவை: கோவை கடைவீதி ராமர்கோயில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). மருத்துவ பிரதிநிதி. 

இவர் மற்றும் இவரது மனைவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் பொருட்கள் உருட்டும் சத்தம் கேட்டது. 

உடனே திடுக்கிட்டு எழுந்த மணிகண்டன் மனைவி சுவிட்சை ஆன் செய்து மின் விளக்கைப் போட்டார். அப்போது வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த நகையைத் திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். 

இதைப் பார்த்து திடுக்கிட்ட அவர் திருடன் என கூச்சல் போட்டார். மனைவியின் சத்தம் கேட்டு எழுந்த மணிகண்டன் அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். 

விசாரணையில், கோவை பத்தரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சூர்யபிரகாஷ்(26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe