கோவையில் போலீசை கத்தியை காட்டி மிரட்டியவர் மீது வழக்கு…

published 9 months ago

கோவையில் போலீசை கத்தியை காட்டி மிரட்டியவர் மீது வழக்கு…

கோவை: கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (46). இவர் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கவுண்டம்பாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தக்காளி மாதவன் (26) என்பவரை தேடி அவர் வீட்டிற்கு சென்றார்.

அப்போது, வீட்டில் கத்தியுடன் இருந்த அவர் தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்தார். தனக்கு எப்படி வாரண்ட் தர வரலாம், உங்களை சும்மா விட மாட்டேன் என அவர் எச்சரித்து தப்பி சென்றார். இது தொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சாயிபாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe