மாரடைப்பால் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி!

published 9 months ago

மாரடைப்பால் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி!

கோவை: கோவை பீளமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி இன்ஸ்பெக்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 48). இவர் கோவை மாநகர காவலில் பீளமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 

திருமணமான இவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுந்தராபுரத்தில் வசித்து வந்தார். 

இதனிடையே இரண்டு நாட்கள் விடுப்பில் நடேசன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார்.

இந்த சூழலில், மாலை 6 மணி அளவில் அவர் வீட்டில் இருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe