கோவை ஆட்சியர் தலைமையில் என் கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி...

published 9 months ago

கோவை ஆட்சியர் தலைமையில் என் கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி...

கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு எனும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கும் அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு ஆலோசனைகள்  வழங்கப்படுகின்றன. 

மேலும் கல்லூரியில் அரசினுடைய உதவி எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு  பல்வேறு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட  ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe