மக்களே கவனம்! கோவை, திருப்பூர், நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்...

published 9 months ago

மக்களே கவனம்! கோவை, திருப்பூர், நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்...

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுகு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது கோடை மழையா? பருவமழையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக மழை தாராளமாய் பொழிந்து வருவதால் கோவை மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

அதன்படி, இன்று முதல் 4 நாட்கள், அதாவது 22ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், 21ம் தேதி வரை திருப்பூர், திண்டுக்கல், விருது நகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது,

தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe