கோவையில் நிலம் வாங்கி வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் ரூ. 12 லட்சம் மோசடி…

published 8 months ago

கோவையில் நிலம் வாங்கி வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் ரூ. 12 லட்சம் மோசடி…

கோவை: நிலம் வாங்கி வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை துடியலூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி விஜயலட்சுமி (47). டெய்லர். இவர் அதே பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்ட முயன்றார். அப்போது அவருக்கு கோவையை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். 

அவர் பணம் கொடுத்தால், நிலம் வாங்கி அதில் வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய விஜலட்சுமி கடந்த ஆண்டு வெவ்வேறு கட்டங்களாக ரூ. 12 லட்சம் கொடுத்தார். ஆனால் பணத்தை வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பாலகிருஷ்ணன் வீடு கட்டி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். 

இதுகுறித்து விஜயலட்சுமி கேட்டபோது நிலம் வாங்கியதற்கான ஆவணத்தை பாலகிருஷ்ணன் விஜயலட்சுமியிடம் கொடுத்ததாக தெரிகிறது. அதனை ஆய்வு செய்த போது அந்த ஆவணம் மோசடியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது. இதுகுறித்து விஜயலட்சுமி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe