தனியார் நிறுவனத்தில் ரூ. 60 ஆயிரம் இரும்பு கம்பிகள் திருட்டு- ஜேசிபி டிரைவர் உட்பட 2 பேர் கைது…

published 8 months ago

தனியார் நிறுவனத்தில் ரூ. 60 ஆயிரம் இரும்பு கம்பிகள் திருட்டு-  ஜேசிபி டிரைவர் உட்பட 2 பேர் கைது…

கோவை: கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ. 60 ஆயிரம் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை போத்தனூரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிக்காக இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இது குறித்து நிறுவனம் சார்பில் சுந்தராபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை திருடி சென்றது ஜேசிபி டிரைவர் குனியமுத்தூர் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம்(26), பாலத்துறை முருகன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் மதன்ராஜ்(34) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe