கோவையில் கோயிலில் புகுந்து தங்கம் திருட்டு…

published 8 months ago

கோவையில் கோயிலில் புகுந்து தங்கம் திருட்டு…

கோவை: கோவை வெறைட்டிஹால் ரோடு சிஎம்சி காலனியில் பூமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த பிரவீன்(22) என்பவர் பூசாரியாக உள்ளார். 

இவர் வழக்கம்போல கோயிலில் பூஜை செய்து விட்டு பூட்டி சென்றார். மறுநாள் கோயிலுக்கு சென்றார். அப்போது கோயிலின் கேட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றுபார்த்த போது கோயிலில் இருந்த 6 கிராம் தங்கம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே அவர் இது குறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோயிலுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe