பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கோவை குண்டுவெடிப்பு கைதி சிக்கினார்...

published 8 months ago

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கோவை குண்டுவெடிப்பு கைதி சிக்கினார்...

கோவை: பண மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரவு கிடைத்தவுடன் தலைமறைவான கோவை குண்டுவெடிப்பு கைதியை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர் (45). இவர் கோவை குண்டுவெடிப்பில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தவர். இந்நிலையில் வெளியே வந்த பின்பு அவர் பணம் மோசடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இவர் மீது காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ - டிக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ  போலீசார் அபுதாஹீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அபுதாஹீருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

இதனை அறிந்ததும் அபுதாஹீர் தலைமறைவானார். அவரை சி.பி.சி.ஐ  போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் உக்கடம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அபுதாஹீரை சி.பி.சி.ஐ  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe