பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

published 8 months ago

பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

கோவை: ரெட் பிக்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். 

அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில் அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிலிப்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர். 

கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் பிலிப்ஸ் ஜெரால்ட் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கடந்த 17ம் தேதி கோவை ஜேஎம். எண் 5ல் வி.எல். சந்தோஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி பெலிக்ஸ் ஜெரால்டை மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெலிக்ஸ் ஜெரால்ட்டை கோவை போலீசார் ஒரு நாள் காவல் எடுத்து விசாரித்தனர். 

காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பெலிக்ஸ் ஜெரால்ட் தரப்பில் ஜாமின் கேட்டு கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று கோவை ஜேஎம்.எண் 4ல் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி சரவண பாபு ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe