திருமணத்திற்கு பிந்தைய உறவு- மிரட்டிய தொழிலாளி கைது…

published 8 months ago

திருமணத்திற்கு பிந்தைய உறவு-  மிரட்டிய தொழிலாளி கைது…

கோவை: கோவை வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவர் தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். 

இவருக்கும் வேலாண்டிபாளையம் காந்தி தெருவை சேர்ந்த தொழிலாளி ரங்கசாமி (49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரங்கசாமி நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் இருந்து விலக முயற்சித்தார். 

பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தினார். இதனால் ரங்கசாமிக்கு அந்த பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று அந்த பெண் வீட்டுக்கு சென்ற ரங்கசாமி அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இது குறித்து அந்த பெண் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குபதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe