KMCH மருத்துவமனையில் நடைபெற்ற கொலை சம்பவம்- மருத்துவமனையை மூட வேண்டுமென சுகாதாரத்துறையிடம் மனு...

published 8 months ago

KMCH மருத்துவமனையில் நடைபெற்ற கொலை சம்பவம்- மருத்துவமனையை மூட வேண்டுமென சுகாதாரத்துறையிடம் மனு...

கோவை: கோவையில் உள்ள KMCH மருத்துவமனையில் ராஜா என்பவர் மருத்துவமனை ஊழியர்களாலும், காவலர்களாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் மருத்துவமனை காவலர், நிர்வாகிகள் என  8 பேர் கைது செய்யப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்நிலையில் அம்மருத்துவமனையில் அரசு சார்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், அம்மருத்துவமனையை மூட வேண்டுமெனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும்  குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் மனு அளித்தார்.


இது குறித்து ரகுநாத் கூறுகையில், உயிரை காப்பாற்ற கூடிய இடத்தில் இருக்கும்  மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஏற்கொள்ள முடியாது என தெரிவித்தார். இச்சம்பவத்தில்  மருத்துவத்துறை சார்ந்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வது மட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையையே மூட வேண்டும் என்றார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமெத்த தமிழகத்திற்கே தலைகுணிவு எனவும் விமர்சித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe