மருதமலை அருகே குட்டியானை மாயம்- தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்...

published 8 months ago

மருதமலை அருகே குட்டியானை மாயம்- தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்...

கோவை: கோவை மருதமலை பெண் யானைக்கு மூன்றாவது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணாததால் கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஈடுப்பட்டுள்ளனர்.

கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யனைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் வனத் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய் யானையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தானாக உணவு உட்கொள்கிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையின் போது குட்டி யானையுடன் சுற்றித் திரிந்த மற்றொரு குட்டி யானை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் - நேற்று இரவு அந்த குட்டி யானையுடன் இந்த ஆண் குட்டி யானை சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாகவும்

மேலும் அதனை தேடி கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe