7 மாதங்களுக்கு பிறகு அனுமதி- குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

published 2 years ago

7 மாதங்களுக்கு பிறகு அனுமதி- குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோவை, ஜூலை.27

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 7 மாதங்களுக்கு பிறகு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காலையில் இருந்தே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக அருவிக்கு வந்தனர். அவர்கள் அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாக உற்சாக குளியல் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe