சாய்பாபா காலனியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு…

published 8 months ago

சாய்பாபா காலனியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு…

கோவை: கோவை, சாய்பாபா காலனி, சண்முகம் நகர் ,சங்கனூர் ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாரதா (வயது 56).
இவர் நேற்று மருதமலை கோவிலுக்கு செல்வதற்காக சங்கனூர் ரோட்டில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறி எம் .டி .பி .ரோடு ஆஸ்பத்திரி அருகில் வந்து இறங்கினார்.
 

அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. பஸ்ஸில் பயணம் செய்த போது யாரோ அதை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சாரதா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்மணிகண்டன், ஏட்டு மகேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று இதே பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருடப்பட்டது.
இப்போது மீண்டும் அதே பஸ்ஸில் பெண் பயனிடம் திருட்டு நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் செயின் பறிப்பு திருடர்கள் நடமாட்டம் தொடங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
 

இது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடந்து வருகிறது. கோவையில் தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது.. அதேபோன்று அரசு பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் இது போன்ற திருட்டுகள் குறையும் என்று போலீசார் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe