மாநகராட்சி மாமன்ற கூட்டம் சனிக்கிழமைக்கு மாற்றம்

published 2 years ago

மாநகராட்சி மாமன்ற கூட்டம் சனிக்கிழமைக்கு மாற்றம்

கோவை, ஜூலை.28-
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வருகின்ற 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு மேயர்  கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறியிப்பில்  கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சியில் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மேயர்  கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற இருந்தது. இந்த மாமன்ற கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe