கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரி உட்பட 2 பேரிடம் பணம் பறிப்பு...

published 8 months ago

கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரி உட்பட 2 பேரிடம் பணம் பறிப்பு...

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரி உட்பட 2 பேரிடம் பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு பாலாஜி நகரை சேர்ந்தவர் மாலைராஜ்(42). தேங்காய் வியாபாரி. 

இவர் நேற்று முன்தினம் இரவு விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் ரோட்டில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாலைராஜிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் அந்த வாலிபர் கத்தி முனையில் மாலை ராஜை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1500 ஐ பறித்து தப்பி சென்றார். 

இது குறித்து மாலை ராஜ் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்தது சத்தியமங்கலம் புளியம்பட்டியை சேர்ந்த வீட்டு தரகர் ராஜ்குமார்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை உடையாம்பாளையம் அசோக் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(37). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்து தனது நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் எரிமேடு ஜங்சன் அருகே சென்ற போது, வழிமறித்த வாலிபர் ஒருவர் ஆனந்தை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 300 ஐ பறித்து தப்பி சென்றார். 

இது குறித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் பறித்த புலியகுளத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) குண்டு மணிகண்டனை(32) போலீசார் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe