அறநிலையத்துறையில் வேலை: 18 அறங்காவலர் பணியிடங்கள் அறிவிப்பு!

published 8 months ago

அறநிலையத்துறையில் வேலை: 18 அறங்காவலர் பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை  சார்பில் கோவில்களில் உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 18 பணியிடங்கள் உள்ளன. தகுதியான நபர்கள் கோவை மற்றும் உதகையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

அரசாங்கம் நிர்ணயித்த விதிகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்கள் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

அறங்காவலர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம். அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2024 ஆகும். நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பபடிவத்தை, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலங்களில் இருந்து  பெற்றுக்கொள்ளலாம்.

இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கோவை – 18

உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கோவை – 18

அனுப்ப வேண்டிய முகவரி : இணை ஆணையாளர் அலுவலகம், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை,
வணிகவரி வளாகம், டாக்டர்.பாலசுந்தரம் ரோடு, கோவை – 18

அறங்காவலர் பணி தொடர்பான  மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://drive.google.com/file/d/1DdyQGgXGP6ktFMlkfwYUeMPc0vvx1KZJ/view என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe