கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

published 8 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை (ஜூன் 19) மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஜூன் 19ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குறிச்சி

குறிச்சி, சுந்தராபுரம், எல்.ஐ.சி.,காலனி, ஹவுசிங் யூனிட், சிட்கோ, ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி ஒருபகுதி மற்றும் மதுக்கரை.

போத்தனுார்

நஞ்சுண்டாபுரம், வெள்ளலுார், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகர்.

க.க.சாவடி

முருகன்பதி, சாவடிபுதுார், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனுார், வீரப்பனுார், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம்.

காளப்பட்டி

காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, கைகோளபாளையம், வலியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர்.புரம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், குமுதம் நகர் மற்றும் செங்காளியப்பன் நகர்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை அறிவிப்புகள் மாறுதல்களுக்கு உட்பட்டவையாக இருக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe