மருதமலையில் பெண்ணிடம் நகை திருடிய வாலிபர் சிக்கினார்!

published 8 months ago

மருதமலையில் பெண்ணிடம் நகை திருடிய  வாலிபர் சிக்கினார்!

கோவை:கோவை அருகே உள்ள வீரகேரளம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் மலர்கொடி( வயது 62). சமையல் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று மலர்கொடி வீட்டு தேவைக்காக 2பவுன்தங்க செயினை விற்க ஒரு பையில் வைத்துக் கொண்டு டவுன்ஹால் பகுதிக்கு செல்ல செல்ல பஸ்ஸில் ஏறுவதற்காக மருதமலை தேவஸ்தானம் பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் காத்திருந்தார்.

அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென அவரது பையை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து மலர்கொடி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் சப் இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேலு மற்றும் சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மலர்கொடியிடம் சென்னை திருடி சென்ற வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை தாம்பரம் லட்சுமிபுரம் பகுதியில் தங்கியிருந்த சுதாகர் (வயது 42) என்ற வாலிபரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். 
சுதாகர் மருதமலை பஸ் நிலையத்தில் மலர்கொடி செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.
 

மேலும் சுதாகர் கோவை பகுதியில் பல்வேறு இடங்களில் கொல்லையில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. அவரது கூட்டாளியுடன் சேர்ந்து பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளான். சுதாகரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe