கோவை மாவட்ட விவசாயிகளுக்கான உற்பத்தி குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

published 8 months ago

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான உற்பத்தி குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜுன் 2024ஆம் மாதத்திற்கான உற்பத்தி குழு கூட்டம் 29.06.2024 சனிக்கிழமை அன்று காலை 09.30 மணியளவிலும், அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் நடத்தப்பட உள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தள கூட்ட அரங்கில் 29.06.2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும்  விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனுக்களை அளிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர், கிராந்திகுமார் பாடி  கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe