வீடியோக்களுக்கு லைக் பணம்: கோவை இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி!

published 8 months ago

வீடியோக்களுக்கு லைக் பணம்: கோவை இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி!

கோவை: கோவை கே.கே.புதூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(33). ஐ.டி. நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ராஜரேகா(27). இவரது வாட்ஸ்-அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் வீடியோக்களுக்கு லைக் கொடுத்தால் பணம் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி வீடியோக்களுக்கு ராஜரேகா லைக் கொடுத்தார். இதனை தொடர்ந்து ராஜரேகா வங்கி கணக்கிற்கு ரூ.2,500-ஐ அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் அனுப்பிய தகவல்களுக்கு தொடர்ந்து ராஜரேகா பதில் அளித்துவந்தார். 

இந்நிலையில் ராஜரேகாவை தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள், தங்களிடம் பணம் முதலீடுசெய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள்.
இதனை நம்பி, ராஜரேகா அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 250-ஐ அனுப்பினார். ஆனால் லாப தொகையும் கொடுக்கவில்லை. அனுப்பிய பணத்தையும் திருப்பி தரவில்லை. 

இதுகுறித்து ராஜரேகா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe