கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப் பார்த்து ரசித்த வாலிபர்: கோவையில் அதிர்ச்சி

published 7 months ago

கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப் பார்த்து ரசித்த வாலிபர்: கோவையில் அதிர்ச்சி

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று காலை மாணவி வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மறைந்திருந்து கதவு சந்து வழியாக மாணவி குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார்.

இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போடவே அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், மாணவி குளித்ததை எட்டி பார்த்தது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்தது.

திருமணமான இவர் மீது ஏற்கனவே ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வழக்கு ஒன்றும் உள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe