கோவையில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய கணவன் மனைவி கைது...

published 7 months ago

கோவையில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய கணவன் மனைவி கைது...

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பவர் 20 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவரது மகனை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 18 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன்-1 ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன் விசாரணை செய்து வந்த நிலையில், தனிப்படையினர் ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த குமார் மகன் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் மனைவி தேவி ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

அதன் பேரில், பிரகாஷ் மற்றும் தேவி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வீடு புகுந்து திருடிய வழக்கின் செத்துக்களான 18 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து  மேற்படி நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe