கோவையில் ஜி.டி.நாயுடுவுக்கு ரூ.50 லட்சத்தில் சிலை- ஸ்டாலின்

published 7 months ago

கோவையில் ஜி.டி.நாயுடுவுக்கு ரூ.50 லட்சத்தில் சிலை- ஸ்டாலின்

கோவை: கோவையில் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

கோவையைச் சேர்ந்த ஜி.டி.நாயுடு பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகப்புகழ் பெற்றவர். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதைகளில் ஒருவர் ஜி.டி நாயுடு. இயந்திரவியல், விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். சிறந்த கல்வியாளர், எளியோருக்கு உதவும் நற்குணம் வாய்ந்தவர்." என்று ஜி.டி.நாயுடுவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர்  அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு கோவையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe