கோவையில் கொலை சாட்சியை மிரட்டியவ கைது!

published 7 months ago

கோவையில் கொலை சாட்சியை மிரட்டியவ கைது!

கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் செலின்(68). இவரது மகன் லியோ மார்ட்டின் கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இன்பேன்ட் ராஜ் மற்றும் சண்முகம் (எ) விக்கு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று செலின் தனது சகோதரி மகனுடன் பைக்கில் புலியகுளத்தில் உள்ள டிபன் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை சண்முகம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் கொலை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து செலின் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அம்மன்குளம் கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் (எ) விக்கு(25) என்பவரை கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe