கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து தர உதவி செய்வது போல் திருட்டு!

published 7 months ago

கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து தர உதவி செய்வது போல் திருட்டு!

கோவை: கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து தர உதவி செய்வது போல் நடித்து வடமாநில வாலிபரிடம் ரூ. 25 ஆயிரம், 2 செல்போன்கள் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிலாந்தர்(35). இவர் கோவையில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று அவர் சொந்த ஊர் செல்வதற்காக டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார்.

அப்போது ரயில் நிலையம் முன்பு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பிலாந்தரிடம் சென்று டிக்கெட் எடுத்து தருவதற்கு உதவி புரிவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி பிலாந்தர் அந்த வாலிபருடன் நடந்து சென்றார். அப்போது அந்த மர்ம நபர் திடீரென பிலாந்தரிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் மற்றும் 2 செல்போனை பறித்து சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிலாந்தர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe