கோவையில் கோர விபத்து; பள்ளி ஆசிரியை பரிதாப பலி!

published 7 months ago

கோவையில் கோர விபத்து; பள்ளி ஆசிரியை பரிதாப பலி!

கோவை: டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள (தனியார்) - நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8:30 மணியளவில் பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

இந்நிலையில் உக்கடம் லாரி அசோசியேஷன்  பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள லாரிப் பேட்டைக்கு வந்த டிப்பர் லாரி ஆசிரியை அனிதா வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

மோதிய வேகத்தில்  ஆசிரியை தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே விழுந்து சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழந்தார்.

இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காலை நேர அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் உடனடியாக அங்கு இருந்து டிப்பர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை காவல் துறையினர் சரி செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியை லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe