கோவையில் நீட் தேர்விற்கு எதிராக கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்...

published 7 months ago

கோவையில் நீட் தேர்விற்கு எதிராக கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்...

கோவை: மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீட் தேர்வை ரத்து செய்ய பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் நீட் தேர்வு முறையை கண்டித்தும் SDPI கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe