கோவையில் ஹோட்டலில் அறை எடுத்து பிறந்தநாள் கொண்டாடியவகள் மீது வழக்கு

published 7 months ago

கோவையில் ஹோட்டலில் அறை எடுத்து பிறந்தநாள் கொண்டாடியவகள் மீது வழக்கு

கோவை: கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு ஓட்டலில் சிலர் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றனர்.

ஓட்டல் அறையில் உக்கடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் சில வாலிபர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடி உள்ளனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் உக்கடம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அறையில் தங்கியிருந்த தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (29), செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த அவினாஷ் குமார் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe