தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறு..!

published 2 years ago

தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறு..!

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி  நடைபெற்று வருகிறது. 

நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில் தேசியக்கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேசியக்கொடிகள் தபால்  நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்ஷெட் சாலை தலைமை தபால் நிலையங்கள் உட்பட கோவையில் உள்ள 200 க்கு  மேற்பட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படு வருகிறது.

சாட்டின் வகை துணியில் தைக்கப்பட்ட தேசியக்கொடியானது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேசியக்கொடியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறனர்.

சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் இதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 3  நாட்கள் வீடுகளில் கொடியேற்றலாம் என்பதை வரவேற்கிறோம். தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேசியக்கொடி பளபளப்பாகவும், விலை குறைவாகவும் உள்ளது. அனைவரும் இதனை வாங்கி பயனடையவும்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe