டாஸ்மாக் மதுவில் தரமும் இல்லை, போதையும் போதவில்லை: அண்ணாமலை!

published 7 months ago

டாஸ்மாக் மதுவில் தரமும் இல்லை, போதையும் போதவில்லை: அண்ணாமலை!

கோவை: டாஸ்மாக் மதுவில் தரம் இல்லை, போதை போதவில்லை என்று தான் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு இளைஞர்கல் செல்கின்றனர் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பா.ஜ.க-வின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலை நீலாம்பூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

முன்னதாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில் கட்சியின் செயலாக்கத்தை ஆய்வு செய்து வருகிறோம். கோவையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளார். நான் வேட்பாளராக பங்கேற்க வந்துள்ளேன்.

அடுத்த தேர்தலுக்குத் தயாராவது, நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற நல்ல விஷயங்களை, தோல்வி கண்ட காரணத்தை ஆராய்ந்து செய்ய இந்த கூட்டம் நடத்த உள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

சி.ஏ.ஜி. டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளது. டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும் சிரமம். அதனால் சி.ஏ.ஜி., அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அமைச்சர் துரைமுருகன் சொன்னதை சில பேர் நகைச்சுவையாக சொன்னாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது சிலரும் அதைச் சொன்னார்கள், தண்ணீர் போல் தான் இருப்பதாகச் சொன்னார்கள். டாஸ்மாக் போதை போதவில்லை என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்கின்றனர்.

டாஸ்மாக் மதுவின் தரம் ஆய்வுக்கு உட்படுத்த படுகிறதா? என்பது கேள்விக்குறிதான். அரசு வேலை செய்யவில்லை, அரசு தவறாக வேலை செய்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் ஒப்புக்கொண்டார்.

சென்னையில் சுகாதாரம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. அடிப்படை சுகாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. இதைப்பற்றி சட்டமன்றத்தில் பேசுவதில்லை.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செய்வதில் தவறில்லை. துபாய், சிங்கப்பூர், போன்ற வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புகிறது.

பொதுமக்கள் வரிப்பணத்தில் செல்லும் முதலமைச்சர் பயணத்தால் மேற்கொண்ட லாபம் என்னவென்று கேட்டால், ஜீரோ தான்.

தமிழகத்தில் திறன் மிக்க நபர்கள் குறைந்து வருகின்றனர். பாடத்திட்டங்கள் முறையாக இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னை மரம்,பனை மரம் மூலம் ஆண்டாண்டு காலமாக கள்ளுக்கடை இருந்தது. அதைக் கொண்டு வர சொல்கிறோம். படிப்படியாக டாஸ்மாக்கை குறைக்கச் சொல்கிறோம். அரசு நடத்தாமல் தனியாரிடம் நடத்தக் கேட்கிறோம். குஜராத், கேரளா மாநிலங்களைப் போன்று மது விற்பனை நடத்த சொல்கிறோம்.

நீட் தேர்வு பொறுத்தவரை ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்க மறுக்கின்றனர்? உச்ச நீதிமன்றம் செல்ல மறுப்பது ஏன்? தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் கதவைத் தட்ட மறுக்கின்றனர். ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நாடகம் நடத்தி வருகின்றார் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe