தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

published 7 months ago

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

கோவை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், இராசா அருண்மொழியை துணைத்தலைவராக கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம்  செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதில்

1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை.

2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை.

3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை.

4.கல்வி உதவித்தொகை

5.திருமண உதவித்தொகை

6.மகப்பேறு உதவித்தொகை

7.மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்

8.முதியோர் ஓய்வூதியம்

ஆகியவை வழங்கப்படுகிறது

இந்த நலதிட்ட உதவிகளை பெறுவதற்கு

1) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 2)18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமில் உள்ளவர்கள் 3)அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe