பெண்ணிடம் அத்துமீறல் 3 பேர் கைது…

published 7 months ago

பெண்ணிடம் அத்துமீறல் 3 பேர் கைது…

கோவை: கணவரை பிரிந்து தனியாக 2 குழந்தைகளுடன் வசிக்கும் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்தவர் 27 வயது பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த முகமது பைசல் (27) என்பவர் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பைசல் ரகுமானின் பேச்சு, நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தவறான கண்ணோட்டத்துடன் அந்த பெண்ணை அணுகியதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் அவரிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தார். இதனால் முகமது பைசல் அந்த பெண் மீது ஆத்திரத்தில் இருந்தார். 

இந்நிலையில், கடந்த 26ம் தேதி முகமது பைசல் தன்னுடன் 2 பேரை அழைத்து கொண்டு அந்த பெண்ணின் வீட்டு முன்பு சென்று தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார். இதனை அந்த பெண் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த முகமது பைசல் பெண்ணின் கைகளை பிடித்து கொண்டு அத்துமீறி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அந்த பெண் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முகமது பைசல், குனியமுத்தூர் அம்மன் காலனியை சேர்ந்த பெயிண்டர் சித்தார்த் (19) மற்றும் குளத்துப்பாளையத்தை சேர்ந்த சிகாபுதீன்(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe