கோவை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 13-ம் தேதி நடக்கிறது

published 2 years ago

கோவை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 13-ம் தேதி நடக்கிறது

கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 13-ம் தேதி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு,சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் உள்ளிட்டவற்றிற்கு உடனடியாக தீர்வுபெற்றுக்கொள்ளலாம்.

எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடக்கிறது.எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe