தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மரணம்…

published 7 months ago

தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மரணம்…

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் சி.ராமசாமி(77) காலமானார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி, வாகரை கிராமம். இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் 8-வது துணைவேந்தராக, 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார். 

இவர் ஒரு புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானி மற்றும் பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் பல உயர்மட்ட குழுக்களின் ஆலோசகராக இருந்துள்ளார். இந்திய பொருளாதா மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். .

இவர், வேளாண் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துதல், தொழில்துறைகளுடன் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தம், தனியார் வேளாண் கல்லூரிகளை துவங்குதல், சொந்த வருவாய் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தை நடத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டவர். 

இவருக்கு சந்திரா என்ற மனைவியும், பிரியா ஆனந்த், சவிதா லெனின் என்ற மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று காலமானார்.

இவரது இறுதிசடங்கு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடக்கிறது. இவரது மறைவுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe