கோவை ராமநாதபுரத்தில் விபசாரம்; அழகிகள் மீட்பு, இருவர் கைது!

published 7 months ago

கோவை ராமநாதபுரத்தில் விபசாரம்; அழகிகள் மீட்பு, இருவர் கைது!

கோவை: கோவை ராமநாதபுரத்தில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது ஆட்டோ டிரைவர். இவர் நேற்று சுங்கம் பகுதியில் நின்றிருந்தார். 

அப்போது அங்கு வந்த 2 பேர், எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம். 

போலீஸ் தொந்தரவு ஏதும் கிடையாது என தெரிவித்தனர். இது குறித்து உடனே அந்த ஆட்டோ டிரைவர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபசார புரோக்கர்களான போத்தனூரை சேர்ந்த செபஸ்டியன்ராஜ் (42) மற்றும் ஒண்டிப்புதூர் காமராஜபுரத்தைச் சேர்ந்த பாபு (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 26 வயதுடைய 2 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe