தொண்டாமுத்தூரில் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

published 2 years ago

தொண்டாமுத்தூரில் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூரில் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் சரியான நேரத்தில் பேருந்து வருவதில்லை என்று ஊர் பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். மேலும் சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் தென்னமநல்லூக்கு வந்த அரசு பேருந்துகளை பொதுமக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி பேருந்துகள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் பாதிப்பு . அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று மறியலை கைவிடப் போவதில்லை என அறிவிப்பு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe