கோவையில் ஆட்கள் இருப்பது தெரியாமல் வீட்டில் புகுந்த 'பலே' கொள்ளையன்!

published 7 months ago

கோவையில் ஆட்கள் இருப்பது தெரியாமல் வீட்டில் புகுந்த 'பலே' கொள்ளையன்!

கோவை: கோவை பீளமேடு, ஆவாரம்பாளையம்  சோபா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. நேற்று இரவு இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இரவு 12 மணியளவில் முகமூடி அணிந்து திருடன் ஒருவன் அங்கு வந்தான். வீட்டிற்குள் ஆட்கள் இல்லை என நினைத்து உள்ளே புகுந்து திருடுவதற்காக அவன் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்தான்.

சத்தம் கேட்டு எழுந்த வீட்டுக்குள் இருந்தவர்கள் திருடன் கதவை உடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் திருடன் வீட்டில் ஆட்கள் இருப்பதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

முன்னதாக திருடன் வீட்டு முன்பு உள்ள சிசிடிவி கேமராவை உடைத்துள்ளான். ஆனால் தெருவில் உள்ள கேமராவில் அவனது உருவம் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe