விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

published 6 months ago

விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

கோவை: வெளிநாட்டில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, அவர் வைத்திருந்த பேக்கில் 4 தங்க கட்டி மற்றும் தங்க நகைகள் இருந்தன. இது 854 கிராம் எடையில் இருந்தது. இதன் மதிப்பு 63.24 லட்சம் ரூபாய்.

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணியை பிடித்து விசாரித்து வருகின்றனர். நகைகள் உரிய வரி செலுத்தாமல் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. வரி ஏய்ப்பு செய்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரக்கூடாது என வருவாய் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe