கோவையில் ஓட்டலில் தங்கியவரிடம் இருந்து ரூ.1.70 லட்சம் திருட்டு!

published 6 months ago

கோவையில் ஓட்டலில் தங்கியவரிடம் இருந்து ரூ.1.70 லட்சம் திருட்டு!

கோவை: கோவையில் ஓட்டல் அறையில் தங்கிருந்த வியாபாரியின் ரூ.1.70 லட்சம் பணம் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹன்ஸ் திங்ரா (49). இவர் பூஜைக்கு தேவையான குத்துவிளக்கு, தாம்பூலம் உள்ளிட்ட பித்தளை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹன்ஸ் திங்ரா வியாபாரம் நிமித்தமாக கோவை வந்தார். வெறைட்டிஹால் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி பொருட்கள் விற்று வசூலான ரூ.1.70 லட்சத்தை தனது அறையில் வைத்து விட்டு சாப்பிட சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த ரூ.1.70 லட்சம் திருடு போனது தெரிய வந்தது.

அறைக்குள் நுழைந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்ஸ் திங்ரா இதுகுறித்து வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe