குழந்தை இல்லாததால் பிரிந்த 2 மனைவிகள் : மனமுடைந்த தொழிலாளி தற்கொலை

published 2 years ago

குழந்தை இல்லாததால் பிரிந்த 2 மனைவிகள் : மனமுடைந்த தொழிலாளி தற்கொலை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: குழந்தை இல்லாததால் 2 மனைவிகளும் பிரிந்து சென்றுவிட மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (34) . கூலித்தொழிலாளி. இவர் இரண்டு முறை திருமணமானவர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கத்தை அவர் பிரிந்தார்.

இதனிடையே இரண்டாவது மனைவியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து சென்றார். இதனால் மாணிக்கம் தனிமையில் இருந்துவந்தார் மேலும், அவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது.

இந்த சூழலில், தனிமையின் விரக்தியில் இருந்த மாணிக்கம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த தொண்டாமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe