இது அ.தி.மு.க கட்டிய பாலம் - எஸ்.பி.வேலுமணி பெருமிதம்!

published 6 months ago

இது அ.தி.மு.க கட்டிய பாலம் - எஸ்.பி.வேலுமணி பெருமிதம்!

கோவை: கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக அரசு தற்போது திறந்து வைக்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவையில் புதிதாக அமைக்கபட்டு நேற்று முதல்வரால்  திறக்கப்பட்ட உக்கடம் - ஆத்துபாலம்  மேம்பாலத்தை   முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர்,கோவை மாவட்டத்திற்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார் என்றும் அந்த வகையில் கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா   சட்டபேரவையில் அறிவித்தார் என கூறினார்.

அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலம் கட்ட உறுதுணையாக இருந்ததாகவும் அவருக்கு கோவை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் இன்னும் இந்த பாலம் வேலை முழுமையாக முடியவில்லை என்பதால் அரசு விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன்,
கோவைக்கு அதிமுக அரசால் கொண்டு வந்த திட்டங்களை தான், திமுக அரசு திறந்து வைக்கிறது எனவும் விமர்சித்தார்.


 

இதேபோல் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் 
கோவை மாவட்ட மக்களின் மீது அன்பு வைத்துள்ளதால் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்காத திட்டங்களை எல்லாம் தந்துள்ளார்கள் எனவும் கூறிய எஸ்.பி.வேலுமணி,இந்த புதிய பாலத்தில் விபத்துகள் ஏற்பாடத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe